அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு
Dec 8 2019 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தருமபுரி மாவட்ட அ.ம.மு.க இளைஞர் பாசறை தலைவர் திரு.பி.பி.எஸ்.சரவணன் - எஸ்.சுஜி பிரதி தம்பதியின் குழந்தைக்கு, "தேவ்" என திரு.டிடிவி தினகரன் பெயர் சூட்டினார். கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.பி.பழனியப்பன், தருமபுரி மாவட்ட செயலாளர் திரு.டி.கே.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு.அரூர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
பாப்பிரெட்டிபட்டி ஒன்றியம், பி.பள்ளிபட்டி முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவரும், அ.ம.மு.க பாப்பிரெட்டிபட்டியின் ஒன்றிய இணைச் செயலாளருமான திரு.சி.பொன்மணியின் மகள் பி.சுவேதா - மணமகன் ஏ.சேடு ஆகியோர், அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனிடம் நேரில் வாழ்த்து பெற்றனர். இன்று பிறந்தநாள் காணும் திரு.சி.பொன்மணியின் மகன் பி.ஜெயசூர்யா, திரு.டிடிவி தினகரனிடம் வாழ்த்து பெற்றார்.
திரு.டிடிவி தினகரனை, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.கே.செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
கரூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.பி.எஸ்.என் தங்கவேலு மரியாதை நிமித்தமாக, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்தார்.