தெலங்கானா என்கவுண்டர் மக்களின் உணர்வாக இருந்தது : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
Dec 8 2019 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானாவில் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டதை, மக்கள் உணர்வோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும், சட்டரீதியாக அணுகினால் உடனடியாக நீதி கிடைக்காது என்பதால், இது போன்ற பிரச்சனைகள் வரும்போது உடனடியாக தண்டனை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், வெங்காயத்தை மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை என்பது அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்காமல், வெங்காயம் மற்றும் வெள்ளை பூண்டை தான் உண்பதில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது வேடிக்கையாக உள்ளதாக குறிப்பிட்டார்.