தமிழகத்தில் அனைவரும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடவேண்டும் : தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி
Dec 8 2019 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றால், போட்டியிடும் அனைவரும் சுயேச்சை சின்னத்துடனே போட்டியிட வேண்டும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. நல்லசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில், கட்சிச்சின்னங்களை வைத்து தேர்தல் நடைபெற்றால் அது நியாயமாக இருக்காது என்றும் கூறினார்.