மனோலி தீவில் வெடி மருந்து பெட்டி கண்டெடுப்பு : இலங்கைக்கு வெடி மருந்து கடத்தல்? - போலீசார் தீவிர விசாரணை
Dec 8 2019 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில், மனோலி தீவில், வெடி மருந்து பெட்டி கண்டெடுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள மன்னார் வளைகுடா தீவுகளில் ஒன்றான மணலி தீவில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக, வெடி பொருட்கள் பதுக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் மனோலி தீவுக்கு சென்றனர். அங்கு நடத்திய சோதனையில், சந்தேகப்படும்படியான பெட்டி ஒன்று கைப்பற்றப்பட்டது.
பெட்டியை ஆய்வு செய்த போலீசார், மேலும் கடத்தல்காரர்கள் பதுங்கி உள்ளனரா என்று மணலி தீவில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், கடத்தல்காரர்கள் யாரும் சிக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படைக்கு பெட்டி கொண்டு செல்லப்பட்டது. இதை, வெடி மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு தான், பெட்டியில் என்ன உள்ளது என்பது தெரிய வரும். கண்டெடுக்கப்பட்ட பெட்டி, இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.