பிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்
Dec 7 2019 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் தங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துகொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக இருந்த திரு. இரா. தனசேகர் அக்கட்சியிலிருந்து விலகி திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த கிளை செயலாளர்கள் திரு. சரவணன் மற்றும் திரு. சங்கர் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை கழகத்தில் இணைத்துகொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாணவரணி மாநில துணைச்செயலாளர் திரு. அன்பழகன் அக்கட்சியிலிருந்து விலகி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.
இதேபோல், மதிமுக லத்தூர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் திரு.சிவராஜ் அக்கட்சியிலிருந்து விலகி கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.
இந்நிகழ்வுகளின்போது செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கோதண்டபாணி உடன் இருந்தார்.