கன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது
Dec 7 2019 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முகநூல் பக்கத்தில் காவலர்கள் குறித்து வெளிநாட்டில் இருந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் கடந்த சில நாட்களாகவே காவலர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் இந்த பக்கம் முடக்கப்பட்டது. இது குறித்து ஆராய்ந்த போலீசார், காவலர்களின் முகநூல் பக்கத்தை முடக்கியவர்கள் ஜெரூன், வினீஸ், பிரைட் சிங், மார்சியன் ஆண்டனி என கண்டுபிடித்தனர். இதனையடுத்து குவைத்திலிருந்து நாடு திரும்பிய ஜெரூனை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர்கள் இந்தியா வரும்போது கைது செய்வதற்கு ஏதுவாக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.