ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்
Dec 7 2019 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூவாணி பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த டிராக்டரை அவர்கள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டிரக்டர் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.