முதல்முறையாக தமிழக வனத்துறை பணியில் சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுகள்
Dec 6 2019 6:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக வனத்துறையில் திருநங்கை ஒருவர் முதல் முறையாக பணியில் சேர்ந்துள்ளார். உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இன்று பணியில் சேர்ந்த அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தை சார்ந்த சுப்ரமணி என்பவர் நீலகிரி வனத்துறையில் பணி புரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் உயிரிழந்த நிலையில், அவரது வாரிசான தீப்தி என்ற திருநங்கைக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தனது தந்தை சுப்பிரமணி பணி புரிந்த நீலகிரி வனக்கோட்டத்திலேயே பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக வனத்துறையில் பணியில் சேர்ந்த முதல் திருநங்கை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு திருநங்கைகள் காவல்துறை உள்ளிட்ட சில துறைகளில் பணியில் சேர்ந்து வரும் நிலையில் வனத்துறையிலும் திருநங்கை ஒருவர் முதல் முறையாக பணியில் சேர்ந்திருப்பது திருநங்கை சமூதாயத்தினரை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.