பாபர் மசூதி இடிப்பு தினம் : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
Dec 6 2019 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ரயில் நிலையங்களில் அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகளும், அவர்களின் உடமைகளும் சோதனைக்கு உட்பட்டுத்தபட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரியும் நபர்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்ட்ரல், கோயம்புத்தூர், திருச்சி, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் கோவை வரையிலான ரயில்நிலையங்களில் மட்டும் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.