நடுக்கடலில் விபத்தில் சிக்கும் மீனவர்களை கண்டறிய உதவும் அதிநவீன கருவியை மீனவர்களுக்கு அரசு வழங்கிட வேண்டும் : மீனவர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை
Dec 6 2019 8:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடுக்கடலில் விபத்தில் சிக்கும் மீனவர்களை கண்டறிய உதவும், அதிநவீன கருவியை மீனவர்களுக்கு அரசு வழங்கிட வேண்டும் என, மீனவர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மீன்பிடிக்க நடுக்கடலுக்கு செல்லும் மீனவர்களின், படகு கவிழ்ந்து விபத்து ஏற்படும்போது, கடல் வழி மற்றும் வான் வழியாக அவர்களை தேட வேண்டியுள்ளது. இயற்கை சூழல் காரணமாக அவர்கள் மூழ்கிய இடம் தெரியாமல், மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சார்ட் என்ற அதிநவீன கருவி, மீனவர்கள் கடலில் மூழ்கிய இடத்தை துல்லியமாக காட்டும் திறன் கொண்டது. எனவே, இந்த கருவியை ஒவ்வொரு மீன் பிடி படகுகளுக்கும் அரசு வழங்குவதோடு, இதனை இயக்கும் பயிற்சியையும் அரசு அளிக்க வேண்டும் என, மீனவர் பாதுகாப்பு சமுதாய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.