சென்னை அம்பத்தூரில் ஆன்லைனில் ஆர்டர் செய்த செல்போன்களை திருடி விற்ற ஆன்லைன் வர்த்தக நிறுவன ஊழியர்கள் 2 பேரை கைது
Dec 6 2019 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அம்பத்தூரில் ஆன்லைனில் ஆர்டர் செய்த செல்போன்களை திருடி விற்ற ஆன்லைன் வர்த்தக நிறுவன ஊழியர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த வினோத் குமார், அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜான்சன் ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவர். இருவரும் சென்னை பட்டரவாக்கத்தில் உள்ள தனியார் ஆன்லைன் வர்த்தக மையத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் வினோத் குமார் தனக்கு கொடுக்கப்படும் 20 பொருட்களில் 17 பொருட்களை வாடிக்கையாளரிடம் கொண்டு போய் சேர்த்து விட்டு மீதமுள்ள உள்ள மூன்று பொருட்களை நிர்வாகத்திடம் ஒப்படைப்பது வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாறு டெலிவரி செய்யப்படாத உயர்ரக செல்போன்களை, திருடி தெரிந்த நபர்களுக்கு விற்று வந்ததாக கூறப்படுகிறது. தினசரி திரும்ப ஒப்படைக்கப்படும் பொருட்கள் குறைந்து கொண்டே வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாக மேலாளர், அம்பத்தூர் தொழிற்பேட்டை குற்றப்பிரிவில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரில் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஊழியர்கள் வினோத் குமார், ஜான்சன் ஆகிய இருவரும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி விற்றது தெரியவந்தது. இந்த நிலையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.