சூடான் தீ விபத்தில் உயிரிழந்த காரைக்கால் இளைஞர் : உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை
Dec 6 2019 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சூடான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த காரைக்கால் இளைஞரின் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வருசபத்துகோட்டாபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிதம்பரம். இவரது மகன் வெங்கடாசலம் செப்டம்பர் மாதம் 16ம் தேதி சூடான் நாட்டில் உள்ள ஷீலா செராமிக் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். இந்நிலையில் செராமிக் தொழிற்சாலையில் நடந்த விபத்தில் வெங்கடாசலம் உள்ளிட்ட 23க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். நேற்று இரவு வெங்கடாசலம் உயிரிழந்துவிட்டதாகவும் உடலை பார்த்ததாகவும் தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது. இதை அறிந்த சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்கள் மட்டும் அல்லாமல் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த வெங்கடாசலத்தின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.