அம்மாவின் நினைவுதினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சிகள் - திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மவுன ஊர்வலம் நடத்தியும் ஏராளமானோர் அஞ்சலி

Dec 5 2019 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், நிர்வாகிகளும், தொண்டர்களும், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. எம். கோதண்டபாணி தலைமையில், திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் செம்மஞ்சேரி திரு.குணசேகரன் தலைமையில், செம்மஞ்சேரி பஸ் ஸ்டாண்ட், கண்ணகி நகரில் அம்மாவின் படத்திற்கு மலர் தூவியும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆலந்தூர் பகுதி கழக சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே, அம்மாவின் திருவுருவப்படத்திற்கு ஆலந்தூர் தொகுதி கழக செயலாளர் திரு. லட்சுமிபதி தலைமையில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கரிகாலன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு.தாம்பரம் நாராயணன் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் நகர கழக செயலாளர் தலைமையில், பம்மல் அண்ணாநகரில் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட குன்றத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் மலைப்பட்டு பேருந்து நிலையம் அருகில், அம்மாவின் திருவுருப்படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.மொளச்சூர் இரா. பெருமாள் உள்ளிட்ட கழகத்தினர் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம், திருமுருகன்பூண்டி பேருராட்சி கழகம், சார்பில் ராக்கியாபாளையம் பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மாவின் திருவருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அம்மாவின் திருவுருவ படத்துடன் மௌன ஊர்வலம் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.

கொங்குநகர் பகுதி கழகம் சார்பில் M.S நகர் 60 அடிரோடு சந்திப்பு, கொடிகம்பம் பகுதிகளில். அம்மாவின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது, ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நாமக்கல் கிழக்கு மாவட்டக்‍ கழகம் ராசிபுரம் நகரம் - வெண்ணந்தூர் ஒன்றியம் சார்பில், வெண்ணந்தூர் பகுதியில் அண்ணாசிலை முன்பாக அம்மாவின் திருஉருவ படத்திற்கு மலர்தூவியும், மாலை அணிவித்தும் கழகத்தினர் மரியாதை செலுத்தி அ.ம.மு.க.வினர், மெளன ஊர்வலம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் ராசிபுரம் நகர கழகம் சார்பில், அம்மா திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து மேலூர் பேருந்துநிலையம் வரை ஏராளமான அமமுக தொண்டர்கள் மௌன ஊர்வலமாக சென்று, அம்மாவின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் நகர அ.ம.மு.க. சார்பில் அந்தந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப்படத்திற்கு கழகத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய அ.ம.மு.க. சார்பில் ஒன்றிய கழக செயலாளர் திரு. ஜெயக்குமார் தலைமையில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான கழக நிர்வாகிகளும். தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

பெரியகுளம் அமமுக நகர கழத்தின் சார்பில், அரமனை தெருவில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், அம்மாவின் திருவுருவ படத்திற்கு, கழகத்தினர் மௌன அஞ்சலி செலுத்தியும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். இதில் கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர் நகர கழகம் சார்பாக, நகர கழக செயலாளர் பீமா. ரஞ்சித் குமார் தலைமையில், அம்மா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கரூர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட அவைத்தலைவர் ஆரியூர் திரு.சுப்பரமணியன் தலைமையில், பேருந்து நிலையம் ரவுண்டானாவில் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நகர கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோல், கிருஷ்ணராயபுரம், ஒன்றியம், கடவூர் ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளிலும், கழக நிர்வாகிகள் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாகப்பட்டினம் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவ படத்திற்கு, கழகம் சார்பில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும், அதனைத் தொடர்ந்து மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம், குடிமங்கலம் ஓன்றிய கழகம் சார்பில், அம்மாவின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மவுன அஞ்சலி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் வேட்டவலம் பகுதியில், கழகத்தினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. எஸ்.ஆர்.தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில், ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு புறநகர் மாவட்டம் அந்தியூர் ஒன்றியக் கழகம் சார்பில், பத்ரகாளியம்மன் ஆலயம் அருகே மாண்புமிகு அம்மாவின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அம்மாவின் திருவுருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், ராமாபுரம் புரட்சி தலைவர் தோட்டம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. இ.லக்கி முருகன் தலைமையில், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில், கொரட்டூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவ படத்திற்கு, மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. திரு.கே.ஏ. மலைமேகம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பூந்தமல்லி நகரக் கழகம் சார்பில், குமணன்சாவடியில் அலங்கரிப்பட்ட மாண்புமிகு அம்மாவின் திருவுருவபடத்திற்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. டி.எ.ஏழுமலை மரியாதை செலுத்தினார்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் தாராபுரத்தில் வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, தாராபுரம் நகரக் கழக செயலாளர் திரு. வாரணவாசை தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

மாண்புமிகு அம்மாவின் நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடியில் கழகம் சார்பில் மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் திரு. பி.ஆர். மனோகரன் தலைமையில், அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டனர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில், பேருந்து நிலையம் எதிரேயுள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலை அருகே, அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ராமு தேவர், மாவட்ட அவைத்தலைவர் திரு. சவரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மயிலாடுதுறையில் மாவட்டக்கழக செயலாளர் திரு. எஸ்.செந்தமிழன் தலைமையில், மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல், சீர்காழி நகரக்கழகம் சார்பில் மாண்புமிகு அம்மா-வின் திருவுருவ படத்திற்கு, நகரச்செயலாளர் திரு. ஏ.கே.சுரேஷ் தலைமையில், மலர்தூவி மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சை தெற்கு மாவட்டம் கழகம் சார்பில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து அமைதி பேரணி நடைபெற்றது. பின்னர், அண்ணாசிலை அருகே அலங்கரிக்‍கப்பட்ருந்தது அம்மாவின் திருவுருவ படத்திற்கு, கழக நிர்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

கும்பகோணம் பெருநகர கழகம் தெற்கு வடக்கு ஒன்றிய கழகங்கள் சார்பில், நகர செயலாளர் திரு. குருமூர்த்தி தலைமையில், அமைதி ஊர்வலம் நடைபெற்று. உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே, அலங்கரிக்கப்பட்ட மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் பாபநாசம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர் திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற, மாண்புமிகு அம்மாவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், நாகர்கோவிலில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொண்டர்கள் பலர் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளர் திருமதி. அம்மு ஆன்றோ உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கழகம் சார்பில், நகரச்செயலாளர் திரு. செல்வன் தலைமையில், காந்தி சிலை பேருந்து நிலையம் அருகே, அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அரியலூர் செந்துறை சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, ஊராட்சிக்‍ கழகச் செயலாளர் திரு. மருதை உள்ளிட்ட பலரும், மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் போடியில் கழக நகரச் செயலாளர் திரு ஞானவேல் தலைமையில், அமைதி பேரணி நடந்தது. பின்னர் வள்ளுவர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த, அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மரியாதை செலுத்தினர். சின்னமனூர், கம்பம், கூடலூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்‍குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியில், அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப்படத்திற்கு, ஒன்றிய கழகச் செயலாளர் திரு. சிவசுப்பிரமணியன் தலைமையில், அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கழக அமைப்பு செயலாளர் திரு. ஹென்றி தாமஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் அக்ரஹாரம் பகுதி, பெரியசேமூர் பகுதி கழகம் சார்பில், மெளன ஊர்வலமாக சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அம்மாவின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகர் பொருளாளர் திரு. தரணி சண்முகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் அம்மா நினைவுதினத்தையொட்டி, அவரது திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ். கலைச்செல்வன், கழக அமைப்புச் செயலாளர் திரு.தேனாடு லட்சுமணன், நகர செயலாளர் திரு.எஸ்.கே.ஜி. சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் திரு.மோகன், கழக மாவட்ட துணை செயலாளர் திருமதி சத்தியபாமா மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கழகம் சார்பில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் திரு. ஜோதிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேலூர் கிழக்கு மாவட்டம் குடியாத்தத்தில் நகர செயலாளர் திரு. நித்தியானந்தம் தலைமையில், அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவ படத்திற்கு, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.





செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00