விருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு
Dec 4 2019 9:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற யோகா சாதனை நிகழ்ச்சியில், ஏழாம் வகுப்பு படிக்கும் ஷிவாணி என்ற மாணவி, கண்டபெருண்டாசனம், பூரண உஷ்ட்ராசனம் இணைந்த நிலையில், கைகளை கீழே ஊன்றி கால்களை மேலே தூக்கி தலைகீழாக கரணம் அடித்தவாறே, 53 மீட்டர் தூரத்தை 46 நொடிகளில் கடந்து உலக சாதனை புரிந்தார். இதன் மூலம், நோபிள் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில், மாணவி ஷிவாணி இடம்பிடித்தார்.