தமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண்
Dec 4 2019 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் தமிழ் வார்த்தைகள்,கவிதை,பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திருப்பூரில் தமிழ் வார்த்தைகள், பாடல்கள், பாரதியார் கவிதைகள் என அனைத்தையும் தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் பெண் தனது திறமையை ஊக்குவிக்க அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மனோன்மணியம் என்ற இளம்பெண் தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பட்டதாரி பெண்ணான மனோன்மணியம் சிறு வயது முதலே தமிழ் வார்த்தைகளை தலைகீழாக வாசிக்கும் பழக்கத்தை கற்றுகொண்டுள்ளார். சினிமா பாடல்கள், கவிதை, ஊர்பெயர், செய்யுள் தொகுப்பு என அனைத்தையும் தலைகீழாக சொல்லி அசத்தும் இவருக்கு தமிழ் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கி உள்ளனர்.
தனது திறமையை மற்ற மாணவர்களுக்கும் சொல்லி தர உள்ளதாகவும், இதற்கு அரசு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.