தருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் கூறும் ஆச்சர்யம்
Nov 30 2019 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுரி அருகே, தனியார் மழலையர் பள்ளியில் படிக்கும் சிறுமி, யோகாவில் அசத்துவதுடன், உலக நாடுகளின் கொடிகளைப் பார்த்து நாடுகளின் பெயர்களைச் சொல்லி, வியப்பில் ஆழ்த்துகிறாள். மொரப்பூரில் வசிக்கும் மணிகண்டன்-அனிதா தம்பதியின் மகள் பிரகதிஸ்ரீ, அங்குள்ள தனியார் பள்ளியில், மழலையர் வகுப்பில் பயின்று வருகிறார். சிறு வயதிலேயே யோகா பயின்று, பல்வேறு ஆசனங்களை அசாத்தியமாக செய்துகாட்டும் இந்த சிறுமி, யோகாசனம் செய்து கொண்டு, பல்வேறு நாடுகளின் கொடிகளைப் பார்த்து, அந்த நாடுகளின் பெயர்களைக்கூறி, ஆச்சர்யப்பட வைக்கிறார்.