பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயோ பிளாஸ்டிக் : அரசு பள்ளி மாணவி கண்டுபிடித்து சாதனை
Nov 27 2019 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மண்ணுக்கும், மனிதனுக்கும் எந்தக் கேடும் ஏற்படுத்தாத பிளாஸ்டிக்கு பொருட்களுக்கு மாற்றாக பயோ பிளாஸ்டிக் எனப்படும் உயிரி நெகிழியைக் கண்டுபிடித்து அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவி சாதனை படைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி அர்ச்சனா, புதிய கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர். சங்கரன் தெருகிராமத்தைச் சேர்ந்த அர்ச்சானாவுக்கு, தந்தையில்லாத நிலையில், அவரது தாயார் விவசாயக் கூலி வேலைக்குச் சென்று மகளை படிக்க வைக்கிறார்.
இந்நிலையில், கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டுள்ள அர்ச்சனா, பிளாஸ்டிக்கு பொருட்களுக்கு மாற்றாக எளிதில் மக்கி உரமாக மாறக்கூடிய பயோ பிளாஸ்டிக் எனப்படும் உயிரி நெகிழியை கண்டுபிடித்துள்ளார். பிளாஸ்டிக் இல்லாத இந்திய நாடாக மாறுவதற்கு இந்த கண்டுபிடிப்பை மேலும் தரப்படுத்தி தயாரிக்க மாநில அரசும் மற்றும் மத்திய அரசும் இதற்கான தொழில் நுட்பங்களை கொண்டு வந்து அடுத்தக்கட்டத்திற்கு இதனை எடுத்துச்செல்ல முன்வரவேண்டும் என்று அர்ச்சானா ஆசைப்படுகிறார்.