பெற்றோர் நலன் பேணும் செயலி கண்டுபிடிப்பு : கோவில்பட்டியில் தனியார் பள்ளி மாணவர்களின் முயற்சிக்கு குவியும் பாராட்டு
Nov 25 2019 4:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பள்ளி மாணவர்கள் பெற்றோர் நலன் பேணும் செயலி ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்கள் உடல் நலன் பேணும் வகையில் எனக்காக நடை பயிலுங்கள். உங்கள் ஆரோக்கியம் பேணுங்கள் என்ற ஒரு ஆண்ட்ராய்ட் செயலியை உருவாக்கி உள்ளனர். பல்வேறு தகவல்கள் அடங்கிய இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும் வகையில் உருவாக்கியுள்ளனர். இதன் அறிமுக விழா அந்த பள்ளியில் நடைபெற்றது. தங்களுடைய அறிவியல் திறனை வளர்த்து கொள்வது மட்டுமின்றி, பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தங்கள் உடல்களை பாதுகாப்பது குறித்து பயனுள்ள வகையில் இந்த செயலியை உருவாக்கியது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.