உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி - திருச்சி ஆலோசனைக்கூட்டத்தில் டிடிவி தினகரன் எழுச்சி உரை
Nov 22 2019 7:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி என திருச்சியில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அ.ம.மு.க. வளர்ச்சிப்பணிகள் குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில், திருச்சியில் இன்று நடைபெற்றது. கழக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய திரு.டிடிவி தினகரன், தேர்தலில் போட்டியிட நிச்சயம் சின்னம் பெறுவோம் என தெரிவித்தார். எதிரிகளையும், துரோகிகளையும் தேர்தலில் பந்தாட வேண்டும் என்றும், யாருக்கும் விலை போகாதவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.