கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Nov 22 2019 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேத்தில், சிதம்பரத்தில் 8 சென்டி மீட்டர் மழையும், கேளம்பாக்கத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், சோழிங்கநல்லூர், கடலூர் மற்றும் காயல்பட்டினத்தில் தலா 6 சென்டி மீட்டர் மழையும், செம்பரம்பாக்கம் மற்றும் சீர்காழி 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழையும் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.