திருவண்ணாமலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் : திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
Nov 22 2019 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திதி கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகை வழங்கவில்லையென்றும், 100 நாட்கள் வேலை திட்டத்தில் 23 நாட்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டிருப்பதாகவும், அதனை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினர். வரும் உள்ளாட்சித் தேர்தலுக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.