தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி
Nov 22 2019 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கருத்துகளுக்கு புறம்பாக தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.