நாமக்கல் மாவட்டத்தில், பழைய பேப்பருடன் சேர்த்து 15 சவரன் நகைகளை தவறவிட்ட பெண் : பேப்பர் வியாபாரியிடம் இருந்து நகைகள் மீட்பு
Nov 22 2019 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை பழைய பேப்பருடன் சேர்த்து போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நகையை போலீசார் மீட்டுக்கொடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள விக்னேஷ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சாமுவேல் -கலா தேவி தம்பதியர். கலாதேவி இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்த பழைய பேப்பர்களை வியாபாரிக்கு போட்டுள்ளார். அந்த பேப்பரில் சுருட்டி வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 சவரன் நகையும் இருந்துள்ளது. சிறிது நேரம் கழித்து நகை பற்றி நினைவுக்கு வந்ததையடுத்து, கலாதேவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணித்தனர். மேலும் ராசிபுரம் பகுதியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சேலம் பகுதியில் இருந்து வாகனத்தில் வந்து பழைய பேப்பர்களை வாங்கி சென்றது தெரியவந்ததையடுத்து, காவல்துறையினர் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள ராமன் காடு பகுதியில் செல்வராஜ் என்ற பேப்பர் கடைக்காரரிடம் விசாரித்தனர். பழைய நோட்டுப் புத்தகத்தில் இடையே நகை பெட்டகங்கள் இருந்ததை கூறினார். இவைகளை மீட்ட போலீஸார் அவரை அழைத்து வந்து நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நகைகளை திரும்ப ஒப்படைத்தற்காக பேப்பர் வியாபாரி செல்வராஜை பாராட்டி கலாதேவி குடும்பத்தினர் 10 ஆயிரம் ரூபாய் பரிசளித்தனர்.