ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும் : இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
Nov 21 2019 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் மாநில செயலாளர் மாரியம்மன், கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்களுக்கு தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களை உள்ளடக்கிய குழுவை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.