திண்டுக்கல்லில் தரையில் புரண்டு தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மீண்டும் தர்ணா

Nov 21 2019 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல்லில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசுபள்ளியின் தலைமை ஆசிரியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அறையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான உள் மாவட்ட அளவிலான பணி இட மாறுதல் குறித்த கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. கலந்தாய்வில் அய்யம்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் இந்திரா பங்கேற்று தனக்கு வேறுஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அப்பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாகவும் இதனால், தான் பள்ளிக்கு சரிவர செல்வதில்லை என்று கூறினார். உடனடியாக பணி மாறுதல் வழங்க வேண்டும் என்று தரையில் உருண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து இந்திரா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்த தலைமை ஆசிரியை இந்திரா, சஸ்பெண்ட் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமை ஆசிரியை இந்திராவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00