திமுக - காங்கிரஸ் கட்சியினர் துணையுடன் நடைபெறும் கனிமவளக்கொள்ளை - கொந்தளிக்கும் திருப்பூர் பகுதி மக்கள்
Nov 21 2019 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அருகே திமுக - காங்கிரஸ் கட்சியினர் துணையுடன், மண் மற்றும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காங்கேயம் அருகே படியூர், தம்புரெட்டிபாளையம், கணபதிபாளையம், சிவன்மலை, பாலசமுத்திரம்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து மண் மற்றும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதிகளில் குறைந்த விலையில் விவசாய நிலங்களை வாங்கி, அதிலிருந்து சுமார் 20 அடிக்கு மேல் தோண்டி, மண் மற்றும் அங்குள்ள கனிம வளங்களை திருடப்பட்டுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில், கிராவல் மண் கடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறினர். இது குறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர். திமுக - காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் அரங்கேறி வரும் இக்கொள்ளை சம்பவத்தை தடுத்திட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.