சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தர் தாக்கப்பட்ட விவகாரம் - தீட்சிதரை கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
Nov 21 2019 2:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய விவகாரத்தில் தீட்சிதரை கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த லதா என்ற பெண் பக்தர், கடந்த சனிக்கிழமையன்று நடராஜருக்கு கோயிலுக்கு சாமி கும்பிட சென்றபோது, தர்ஷன் என்ற தீட்சிதர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, லதாவை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து லதா அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தீட்சிதர் தர்ஷனை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.