வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததால் குடல் சரிந்து உயிருக்‍குப் போராடும் விவசாயி - உயிரை துச்சமாக மதித்து காளையிடமிருந்து தந்தையை மீட்டார் மகன்

Nov 21 2019 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காளை மாட்டை மேய்த்து கொண்டிருந்த உரிமையாளரை அந்த மாடு திடீரென சீறிப்பாய்ந்து தாக்கியதில் அவர் குடல் சரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேடசந்தூர் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள அய்யர்மடம் என்ற இடத்தில் மணிவேல் என்பவர் தனது காளை மாட்டினை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த காளை மாடு திடீரென மிரண்டு தனது உரிமையாளர் மீது சீறிப்பாய்ந்தது. தொடர்ந்து அந்த மாடு தாக்கியதில் மணிவேல் குடல் சரிந்து சுருண்டு கீழே விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிவேலின் மகன் பூபதி, தந்தையும் காளையும் இருந்த இடத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை தாண்டி உள்ளே குதித்து, தனது உயிரை துச்சமென மதித்து காளையிடம் போராடி தனது தந்தையை மீட்டார். அப்போது, தனது தந்தையை காப்பாற்ற வருமாறு அழைத்தும் அங்கிருந்த யாரும் உதவிக்கு வரவில்லை.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக, மணிவேலை குத்திக் கிழித்த காளை மாட்டிடமிருந்து அவரது மகன் போராடி மீட்ட சம்பவம் அப்பகுதியில் உணர்ச்சி பெருக்கை ஏற்படுத்தியது. தற்போது உயிருக்‍கு ஆபத்தான நிலையில் மணிவேலுக்‍கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00