ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயசுக்கு, 30 நாட்கள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Nov 21 2019 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயாசுக்கு, 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜரானார். அப்போது, பரோல் கோரிய விண்ணப்பத்தில் தங்க இருக்கும் முகவரியை தெரிவிக்காததால், அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்றும், தற்போது முகவரியை குறிப்பிட்டு ராபர்ட் பயஸ் அளித்துள்ள புதிய பரோல் விண்ணப்பம் சிறைத்துறையின் பரிசீலினையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராபர்ட் பயசுக்கு பரோல் வழங்க ஆட்சேபனை இல்லை என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்‍கொண்ட நீதிமன்றம், அவருக்‍கு 30 நாட்கள் நிபந்தனையுடன் பரோல் வழங்கி உத்தரவிட்டது. கொட்டிவாக்கத்தில் அவர் தங்கி இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00