பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்த அவலம் - செவிலியர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட பெண் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி
Nov 21 2019 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்த பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்த செவிலியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிபுளி அருகே சேதுபதி நகர் மரவட்டி வலசையை சேர்ந்தவர் ரம்யா. பிரசவத்திற்காக அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கடந்த வாரம் ரம்யா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். கடந்த இரு தினங்களாக ரம்யாவிற்கு வலி அதிகமாக இருந்ததால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, வயிற்றுக்குள் ஊசியை கவனக்குறைவாக வைத்து தைத்தது தெரியவந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட செவிலியர்களை கைது செய்ய வலியுறுத்தி ரம்யாவின் உறவினர்கள் உச்சிபுளி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.