ஈரோடு கருங்கல்பாளையம் அருகே கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாத சிறுவர் பூங்கா
Nov 19 2019 7:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு கருங்கல்பாளையம் அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருக்கும் சிறுவர் பூங்காவை விரைந்து திறக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு மாநகராட்சிக்கு 24 கோடியே 93 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 31 இடங்களில் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, கட்டி முடிக்கபட்டு பல மாதங்கள் ஆகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கபடாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாழும் சிறுவர், சிறுமியர் விளையாட இடமின்றி சிரமப்படுகின்றனர். இப்பூங்காவை திறக்க மாநகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.