நீட் ஆள்மாறாட்ட வழக்கில் பிரவினின் தந்தை ஜாமின் மனு தள்ளுபடி - கைதான மாணவர்களின் கை ரேகையை ஒப்பிட்டு பார்க்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Nov 19 2019 7:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவன் பிரவீனின் தந்தை சரவணின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்கள் அனைவரும் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த மாணவன் பிரவீனின் தந்தை சரவணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். எவ்வித ஆதாரமும் இன்றி காவல்துறையினர் தன்னை கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அடுத்து, சரவணனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக, நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்பிருப்பதாகக்கூறி காவல்துறையினர் தேடுவதால் தங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டுமென, சென்னை கோபாலபுரத்தில் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மகன் ரிஷிக்காந்த் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவனின் விரல் பதிவையும், தேர்வு மையத்தில் மாணவனிடம் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டதோடு, அதுவரை மாணவன் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய தடை நீடிக்கும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.