அனுமதியின்றி பராமரிக்கப்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானை - வனத்துறையினர் காலம் தாழ்த்துவதாக கோயில் நிர்வாகம் குற்றச்சாட்டு
Nov 19 2019 6:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீ்வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் பராமரிக்கப்படும் யானைக்கு அனுமதி வழங்கக்கோரி 3 ஆண்டுகளாக விண்ணபித்தும், வனத்துறையினர் காலம் தாழ்த்தி வருவதாக, கோவில் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாள் நாச்சியார் கோயில் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2011-ம் ஆண்டு, சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர், 5 வயதுடைய ஜெய்மல்யதா என்ற யானையை, கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக கோவில் நிர்வாகம், வனத்துறை அனுமதி இல்லாமல் யானையை பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, மூன்று ஆண்டுகளாக வனத்துறையினருக்கு கோப்புகளை அனுப்பி வருவதாகவும், ஆனால், வனத்துறையினர் அதனை பரிசீலிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.