திண்டுக்கல் மாவட்டத்தில் பணியிட மாறுதல் கிடைக்காததால் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்ணா போராட்டம்
Nov 19 2019 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கலில், பணியிடமாற்ற கலந்தாய்வில் கலந்துகொண்ட தலைமை ஆசிரியர் ஒருவர், பணியிட மாறுதல் கிடைக்காததால், தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம், திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. குஜிலியம்பாறையை அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த மூன்று வருடங்களாக பணியாற்றி வரும்
இந்திரா என்பவர், பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்தும் மாறுதல் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்திற்கான காரணத்தை கேட்டபோது, அவர் பணியாற்றும் பள்ளியில், இரண்டு குழந்தைகள் மட்டுமே படித்து வருவதாகவும், இதனால் பணியிடம் மாற்றம் கேட்டு பலமுறை விண்ணப்பித்தும், மாறுதல் தராமல் இழுத்தடிப்பதாக தலைமை ஆசிரியை இந்திரா தெரிவித்தார்.