சர்க்கரை குடும்ப அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாறுதல் செய்து கொள்ளலாம் - தமிழக அரசு அறிவிப்பு
Nov 19 2019 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடும்ப அட்டைதாரர்கள், சர்க்கரை அட்டையினை அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சர்க்கரைக் குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, இன்று முதல் வரும் 26ம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் என்றும், அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியில் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.