சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பான விசாரணை - கேரளா விரைந்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்
Nov 19 2019 7:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
சென்னை ஐஐடி விடுதியில் மாணவி பாத்திமா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு பேராசிரியர் சுதர்சன் பத்பநாமன்தான் காரணம் என மாணவியின் தந்தை ஆதாரத்துடன் தமிழ்நாடு போலீசில் புகார் அளித்துள்ளார். மாணவி தற்கொலை வழக்கு குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, சுதர்சன் பத்மநாபன் உள்பட பேராசிரியர்கள் 3 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தியது. மேலும் ஐஐடி பணியாளர்கள், பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், பாத்திமாவின் தாய், சகோதரியிடம் விசாரணை நடத்துவதற்காக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா மாநிலம் கொல்லம் செல்கின்றனர். விடுமுறைக்காக கேரளா சென்றுள்ள பாத்திமாவின் தோழிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.