பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளதாக புகார் : தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தொடங்கியது விசாரணை
Nov 19 2019 7:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பான விசாரணை, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தொடங்கியுள்ளது.
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாகவும், அதை மீண்டும் ஒப்படைத்தால் மகிழ்ச்சிதான் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இதற்குரிய ஆவணங்களை காட்டவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பா.ஜ.க. தமிழக செயலாளர் திரு. சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், முரசொலி மேலாண்மை இயக்குநர் திரு. உதயநிதி ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இந்த புகார் மீதான விசாரணை சென்னை சாஸ்திரி பவனிலுள்ள தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைத்தில் இன்று நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் ஆஜராகாத நிலையில், தி.மு.க. வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைச் செயலாளர் சண்முகம், புகார் அளித்த பா.ஜ.க. நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் ஆஜராகினர்.