தூத்துக்குடி மக்களவை தொகுதி வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மனு - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
Nov 19 2019 6:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மக்களவை தொகுதி வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி கனிமொழி, தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக எம்.பி, கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதி வாக்காளர் சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எம்.பி கனிமொழி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய ஆதாரங்கள் உள்ளனவா என்பது குறித்து, விசாரணையின்போதுதான் முடிவு செய்ய முடியும் எனக் கூறிய நீதிபதி, கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்தார்.