அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
Nov 19 2019 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக நியமிக்கப்பட்ட திரு.ஹிமாம்பாதுஷா சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.செந்தில்முருகன், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளாராக நியமிக்கப்பட்ட திரு.செல்லம், திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. நவமணி, திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, எம்ஜிஆர் மன்றம் உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு. S.V.S.P. மாணிக்கராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.