ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Nov 19 2019 2:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 6 சென்டி மீட்டர் மழையும், திருசெந்தூரில் 5 சென்டி மீட்டர் மழையும், ஆலங்குடியில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.