நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் - காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிவுரை
Nov 19 2019 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. ஏ.கே. விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் மாநில அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. ஏ.கே. விஸ்வநாதன் கலந்துகொண்டு உரையாற்றினார். பெண் குழந்தைகளை போல, ஆண் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு அவசியம் தேவை என்றும், நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.