முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக எழுந்துள்ள புகார் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் உதயநிதி இன்று ஆஜர்
Nov 19 2019 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆஜராகிறார்.
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாகவும், அதை மீண்டும் ஒப்படைத்தால் மகிழ்ச்சிதான் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உரிய ஆவணங்களை காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பா.ஜ.க. தமிழக செயலாளர் திரு. சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், முரசொலி மேலாண் இயக்குநர் திரு. உதயநிதி ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, இன்று மாலை விசாரணைக்கு ஆஜராகும் திரு. உதயநிதி ஸ்டாலின், அவா் தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பஞ்சமி நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அவை மீட்கப்படும் என்றும் தாழ்த்தப்பட்ட ஆணைய துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.