தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல் - நெல்லை அருகே டெங்கு காய்ச்சலுக்கு மூன்றரை வயது சிறுமி பலி
Nov 19 2019 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநெல்வேலி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மூன்றரை வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்டம் செல்லமருதூரைச் சேர்ந்த சந்திரசேகரின் மூன்றரை வயது மகள் மோனிஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் குணமாகாத நிலையில், மோனிஷா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பயனின்றி மோனிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, திசையன்விளையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர், தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.