தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்களில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், உள்ளாட்சித் தேர்தலில் ஆற்றவேண்டிய களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் நகரக்கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் ராமுதேவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் விருப்ப மனு அளித்தனர். கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச்செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் திரு.முத்துசாமி, கழக அமைப்பு செயலாளர் டாக்டர். கதிர்காமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,
கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் கழகம் சார்பில்
கிருஷ்ணகிரியில் நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.ச.கணேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கழகத்தின் சார்பில் உள்ளாட்சி
தேர்தலில் போட்டியிடும் கழக நிர்வாகிகளுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மடப்பட்டில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கே.ஜி.பி.ராஜாமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய அயராது பாடுபடுவது என்றும், கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கழக வளர்ச்சிப்பணிகள் குறித்து திருச்சி வடக்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட, புள்ளம்பாடி ஒன்றியக்கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புள்ளம்பாடியில் கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கவும், தேர்வு செய்யப்படும் வேட்பாளர்களை சிறப்பாக களப்பணியாற்றி வெற்றியினை உறுதிசெய்ய பாடுபடவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் அதிமுக, திமுகவிலிருந்து விலகி ஏராளமானோர் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
நாகை வடக்கு மாவட்டம், குத்தாலம் தெற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், வடக்கு மாவட்ட செயலாளர் திரு.எஸ்.செந்தமிழன் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குத்தாலம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் வாய்மை இளஞ்சேரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியக் கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் திரு.இ.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை வெற்றி பெற செய்ய கழகப் பணிகளை ஆற்றுவது குறித்தும், எடப்பாடி அரசின் அவலங்களை வீடு வீடாக சென்று எடுத்துரைக்கும் வகையில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து கழகத்தினர் விருப்பமனுக்களை வழங்கினா்.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தஞ்சை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், துணைப் பொதுச் செயலாளருமான திரு.எம்.ரெங்கசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு.எஸ்.டி.எஸ். செல்வம், தஞ்சை தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.துரை, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.சிவ ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.