விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையேயான கருத்து மோதல் : நேரில் வந்து மிரட்டிப் பாருங்கள் என்று காயத்ரி ரகுராம் நேரடி சவால்
Nov 19 2019 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராம் இடையேயான மோதல் முற்றி வருகிறது.
நிறைய அசிங்கமான பொம்மை இருந்தால் அது இந்து கோயில் என்று சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருந்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு இந்துக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, நான் கூறியதை திரித்து கூறி எனக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள் என திருமா வளவன் கூறியுள்ளார். இதற்கிடையே காயத்ரியின் வீட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக நேரில் வந்து என்னை மிரட்டிப் பாருங்கள் என்று காயத்ரி ரகுராம் நேரடி சவால் விடுத்துள்ளார் . மேலும் இந்த விவகாரத்தை மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும், போலீசில் புகார் அளிக்கப்போவதாகவும் காயத்ரி ரகுராம் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.