கண்களைக் கட்டிக் கொண்டு புத்தகத்தை படிக்கும் மாணவி : எதிரே இருப்பவர்கள் செய்யும் செயல்களையும் சொல்கிறார்
Nov 18 2019 9:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே, சின்னக்கலையமுத்தூரில், ஏழாவது படிக்கும் மாணவி கண்ணைக் கட்டிக் கொண்டு படிப்பதும், நிறங்களை கூறுவதும் பார்ப்போரை அதிசயத்தில் ஆழ்த்தி வருகிறது.
பழநியை அடுத்த, பாலசமுத்திரம் குரும்பப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் - ஜோதி தம்பதியின் மகள் ராகவி. 12 வயதாகும் இவர், நெய்க்காரப்பட்டி பி.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி ராகவி, பிரைட்டர் மைண்ட் எனப்படும், வகுப்பில் மேற்கொண்ட பயிற்சியின் விளைவாக, தற்போது கண்களைக் கட்டிக் கொண்டு எதிரே இருப்பவர்கள் செய்யும் செயல்களை சொல்கிறார். மேலும், கண்களை துணியால் இறுக்கமாக கட்டிக் கொண்ட பிறகு, எதிரே காட்டும் எழுத்து, நிறம், வாசகங்களை அனாயாசமாக சொல்கிறார். கண்களைக் கட்டிக் கொண்டு புத்தகங்களை மிகச் சாதாரணமாக படிப்பது, பார்ப்போரை ஆச்சரியப்பட வைக்கிறது. இவரது திறமையை கருதி, மாவட்ட நிர்வாகம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்ட வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.