சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை கீழ்த்தரமாக பேசி தாக்கிய கோயில் தீட்சிதர் : போலீசார் விசாரணை
Nov 17 2019 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் செவிலியர், தீட்சிதரால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த லதா என்பவர், காட்டுமன்னார் கோவிலை அடுத்த ஆயக்குடியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு, நடராஜர் கோவிலுக்கு அவர் நேற்றிரவு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது, முறையாக அர்ச்சனை நடத்தவில்லை எனக்கூறி, தீட்சிதருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர், செவிலியர் லதாவை கீழ்த்தரமாக பேசியதுடன், கன்னத்திலும் அறைந்ததில், அவர் மயங்கி விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து தீட்சிதரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதாவிடம், புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.