மதுரை உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
Nov 17 2019 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை உசிலம்பட்டியில் 58 கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை உசிலம்பட்டி 58 கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை முன்வைத்து இன்று போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, உசிலம்பட்டி பாசன கால்வாய் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை முற்றிலும் ஒடுக்கும் விதமாக காவல் துறையினர் ஆங்காங்கே விவசாயிகளை கைது செய்து அழைத்துச் சென்றனர். 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் அங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நியாயமான கோரிக்கைகளுக்காக போராடினால் கைது செய்யப்படுவதா? என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.