நீரிழிவு நோய் விழிப்புணர்வு கண்காட்சி : விழிப்புணர்வின்றி 8 கோடி பேர் பாதிப்பு என தகவல்
Nov 17 2019 2:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில், நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. நோய் பற்றி முறையான விழிப்புணர்வு இல்லாததால், 8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்தனர்.
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சர்க்கரை நோயாளிகளுக்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மருத்துவ ஆலோசனை நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு 4 கோடி பேருக்கு இருந்த சர்க்கரை நோய், முறையான விழிப்புணர்வு இல்லாததால், தற்போது 8 கோடி பேருக்கு உள்ளதாக நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர்.