திண்டுக்கல் மாவட்டத்தில் செங்காந்தள் மலர்கள் உற்பத்தி அதிகரிப்பு : தெம்மாங்கு பாட்டுப்பாடி அறுவடை செய்யும் பெண்கள்
Nov 17 2019 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் செங்காந்தள் மலர்கள் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அறுவடையின்போது களைப்பு தெரியாமல் இருக்க, பெண்கள் தெம்மாங்கு பாட்டுப்பாடி பணியாற்றி வருவது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
சங்ககால இலக்கியங்களில் பாடப்பெற்ற மலர்களில் முக்கிய இடத்தை பிடித்த செங்காந்தள் மலர்கள், தமிழகத்தின் முக்கிய மலராக உள்ளது. செங்காந்தள் மலர்ச் செடிகளின் கிழங்குகளை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்படாமல் இருப்பதுடன், பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட அருமருந்தாகவும் விளங்குகிறது. காடுகள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களால் செங்காந்தள் மலர்ச் செடிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் செங்காந்தள் மலர்கள் பயிரிடப்பட்டுள்ளன. செங்காந்தள் மலர்கள் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி பெண்கள் அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.